தர்மபுரி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 மாவட்ட திட்டக் குழு உறுப்பிணர் பதவிக்கு தேர்தல் நேற்று நடைப்பெற்றது. இதில் 12 கவுன்சிலர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பிணர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் நபர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன் உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அனிதா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.
இதில் 3வது வார்டு கவுன்சிலர் ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்த தீபாமுருகன் மாவட்ட திட்ட குழு உறுப்பினராக வெற்றி பெற்றதற்க்கு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகள், கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக