பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்‌ பொது ஏல அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜூன், 2023

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்‌ பொது ஏல அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில்‌ மதுவிலக்கு வழக்குகளில்‌ கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்‌ 14/6 படி அரசுக்கு பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ள 6 நான்கு சக்கர வாகனங்கள்‌ மற்றும்‌ 48 இருசக்கர வாகனங்கள்‌ மொத்தம்‌-54 வாகனங்கள்‌ வரும் 27.08.2023-ம்‌ தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில்‌ பொது ஏலத்தில்‌ விடப்படவுள்ளது, நான்கு சக்கர வாகனங்களை ஏலம்‌ எடுக்க விரும்புவோர்‌ முன்வைப்பு தொகையாக ரூபாய்‌ 10000ம்‌, 27.06.2023ம்‌ தேதி காலை 08.00 மணிக்குள்‌ ஏலம்‌ நடைபெறவுள்ள இடத்தில்‌ செலுத்த வேண்டும்‌. 


முன் வைப்புத்தொகை செலுத்துவோர்‌ மட்டுமே ஏலத்தில்‌ கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்‌. ஏலம்‌ விடப்படவுள்ள வாகனங்களைத்‌ தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில்‌ 27.08.2023-ம்‌ தேதி காலை 08.00 மனிக்கு நேரில்‌ பார்வையிடலாம்‌. இருசக்கர வாகனத்தினை ஏலம்‌ எடுத்தவுடள்‌ ஏலத்தொகை முழுவதையும்‌ செலுத்தி அப்போதே வாகனத்தினைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌, நாள்கு சக்கர வாகளத்திற்கு ஏலத்தொகைக்கு 18 விழுக்காடு, இருசக்கர வாகளத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு சேர்த்துச்‌ செலுத்தப்பட வேண்டும்‌.


மேலும்‌ விவரங்களுக்கு கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌, மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அவர்களிள்‌ அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்‌. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி தொலைபேசி என்கள்‌: 04342- 230759, 262561, கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌, மாவட்ட காவல்‌ அலுவலகம்‌, தருமபுரி, தொலைபேசி எண்‌ - 04342 - 230759.

கருத்துகள் இல்லை:

Post Top Ad