தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள எஸ்.ஜெ. காம்ப்ளக்ஸில் கனரா வங்கி புதிய கிளை துவக்க விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி மேலாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கனரா வங்கியின் 51வது கிளை துவக்க விழாவினை மண்டல மேலாளர் வினிஷ் பாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாலக்கோட்டை சேர்ந்த தொழிலதிபர்கள் குப்பன், சேகர், செந்தில், கிரிநாத், ஜெகநாத், சோமேஷ், மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினனவு பரிசுகள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக