வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்கள் வருகின்ற 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்கள் வருகின்ற 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்கள் வருகின்ற 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளானது 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற உள்ளது. அதன் அங்கமாக 04.11.2023 (சனி) மற்றும் 05.11.2023 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து, 18.11.2023 (சனி) மற்றும் 19.11.2023 (ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 18.11.2023 அன்று பணி நாளாக தமிழக அரசால் அறிவிப்பு வெளிடப்பட்ட காரணத்தினால், அன்றைய தினமும் அதற்கு மறுநாளான 19.11.2023- ஆம் தேதியும் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 25.11.2023 (சனி) மற்றும் 26.11.2023 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த முகாம்களில், தகுதியான நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 வழங்கியும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வழங்கலாம்.


மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற Link மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad