பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்கில் தீபாவளி பம்பர் பரிசாக 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வென்ற பெண் வாடிக்கையாளர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்கில் தீபாவளி பம்பர் பரிசாக 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வென்ற பெண் வாடிக்கையாளர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  ஸ்ரீராம் சில்க் ஜவுளி கடை தொடங்கப்பபடு இயங்கி வருகிறது. மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஆயுதபூஜை தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு மெகா பம்பர் பரிசாக 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் வழங்குவதாக ஸ்ரீராம் சில்க்ஸ்  கே.ஜி.எம்.நிறுவனம் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து நவம்பர் 15-ம் தேதி குலுக்கல் முறையில் சொகுசு கார் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துனிக்கடை வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம். குழும ஸ்தாபகர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர்.மோகன பிரியா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.


இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர்  கே.கோவிந்தராஜி ஆகியோர் தலைமையில் பரிசு குழுக்கள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் கே.வி.ரங்கநாதன், மங்கள கணபதி நிதி நிறுவனர் முருகேசன், திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், வணிகர் சங்க தலைவர் பி.என்.பி.முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சேகர், ஒப்பந்ததாரர் பி.எல்.ஆர்.ரவி, ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவனர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டதில் ஜெர்தலாவ் பஞ்சாயத்து சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கு சொகுசு கார் பரிசாக விழுந்தது. உடனடியாக அதிர்ஷ்டசாலி  திவ்யாவை அழைத்து சொகுசு காரை பரிசாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் , ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் ராம்குமார் பாலக்கோடு, அக்ரோ சங்க தலைவர் சாம்ராஜ், அதிமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் சங்கர். கால்நடை மருத்துவர் தியாகசீலன், தொழிலதிபர் ஓம் முருகா பைனான்ஸ் சரவணன், கருமலை ஆண்டவர் மணி, நகை கடை அதிபர்கள் பாலாஜி, பத்திரிநாத், சக்கரை ஆலை வீரமணி, பாமக மாவட்ட துணைத் தலைவர் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், சரவணன், ஜெயந்திமோகன், ரூஹித், குருமணி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கே.ஜி.எம்.குழும கெளரவ தலைவருமான கே.ஜி.மாதையன் மற்றும் ஸ்ரீராம் சில்க் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார். இந்நிகழ்சியை உதயகுமார் மற்றும் பசல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad