அதனை தொடர்ந்து நவம்பர் 15-ம் தேதி குலுக்கல் முறையில் சொகுசு கார் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துனிக்கடை வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம். குழும ஸ்தாபகர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர்.மோகன பிரியா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டதில் ஜெர்தலாவ் பஞ்சாயத்து சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கு சொகுசு கார் பரிசாக விழுந்தது. உடனடியாக அதிர்ஷ்டசாலி திவ்யாவை அழைத்து சொகுசு காரை பரிசாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் , ஸ்ரீரங்கா டிபார்ட்மென்ட் ராம்குமார் பாலக்கோடு, அக்ரோ சங்க தலைவர் சாம்ராஜ், அதிமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் சங்கர். கால்நடை மருத்துவர் தியாகசீலன், தொழிலதிபர் ஓம் முருகா பைனான்ஸ் சரவணன், கருமலை ஆண்டவர் மணி, நகை கடை அதிபர்கள் பாலாஜி, பத்திரிநாத், சக்கரை ஆலை வீரமணி, பாமக மாவட்ட துணைத் தலைவர் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், சரவணன், ஜெயந்திமோகன், ரூஹித், குருமணி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கே.ஜி.எம்.குழும கெளரவ தலைவருமான கே.ஜி.மாதையன் மற்றும் ஸ்ரீராம் சில்க் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்சியை உதயகுமார் மற்றும் பசல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக