காரியமங்கலம் அண்ணா நகர் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசு வெடித்த இருவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 நவம்பர், 2023

காரியமங்கலம் அண்ணா நகர் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசு வெடித்த இருவர் கைது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் குமார் (வயது.22) தமிழரசன் (வயது. 23)  இருவரும் நேற்று தெருவில் நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பும் பட்டாசுக்களை வெடித்து கொன்டிருந்தனர்.


மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதல் நேரம் பட்டாசு வெடித்து  கொண்டிருந்தனர் என காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அதிக ஒலி எழுப்பும் பட்டாசுக்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad