பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டிகள் அரூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இந்த போட்டிகளில் தர்மபுரி காந்திநகர் ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் ஜனனிராய், பதக்கமும் தர்ஷன், பாலாஜி, கௌதமன், கனிஷ்கா, கவின்குமார் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை விஜய் வித்யாலயா கல்விநிறுவனர் டி.என்.சி.மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக், இயக்குனர் சர்வந்திதீபக், பள்ளிமுதல்வர் வள்ளியம்மை, துணைமுதல்வர் ஜோஸ்பின் ஜெர்சிந்தா உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு, பரமேஷ், ஆதிரை, கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக