பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 10 மாதமாக பி.டி.ஓ வாக பணியாற்றி வருபவர் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த சங்கர் (வயது. 53) இவர் பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாக பொதுமக்கள் எழுப்பிய குற்றசாட்டில் பாலக்கோட்டில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக் முன்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு மாற்றப்பட்டார், மீண்டும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாலக்கோடு பிடிஓ ஆபிசிற்க்கு பணி மாறுதலாகி வந்தார்.
வந்ததில் இருந்து தினமும் குடிபோதையில் அலுவலகத்திற்க்கு வருவதாகவும், அலுவலகத்திலேயே அமர்ந்து மது அருந்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது, மேலும் இவரது குடிபழக்கத்தை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் காசோலை பெறுவதற்கு மதுவை வாங்கி கொடுத்து காரியம் சாதித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்ந நிலையில் நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் ஒருவர் பி.டி.ஓ.சங்கருக்கு மது வாங்கி கொடுத்துள்ளர். அலுவலகத்தில் கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ சங்கர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரனை நடத்திய மாவட்ட கலெக்டர் சாந்தி அவர்கள் பி.டி.ஓ சங்கரை சஸ்பென்ட் செய்து உத்தவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக