தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கிழக்குப்பள்ளம் கிராமத்தில் வசித்து வந்தவர் திருப்பதி (வயது 50) இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி குணமாகததால், விரக்தியில் இருந்தவர் நேற்று விடியற்காலை விவசாய தோட்டத்திற்க்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக