மை தருமபுரி அமைப்பிற்கு தேசிய தன்னார்வ இரத்ததான தின பாராட்டு சான்றிதழ் தருமபுரி ஆட்சியர் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

மை தருமபுரி அமைப்பிற்கு தேசிய தன்னார்வ இரத்ததான தின பாராட்டு சான்றிதழ் தருமபுரி ஆட்சியர் வழங்கினார்.


தருமபுரி மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் அவசர இரத்ததான உதவி, தட்டணுக்கள் தானம், புதிய குருதி கொடையாளர்களை ஊக்கப்படுத்துதல் போன்ற உயிர் காக்கும் இரத்ததான சேவையை மை தருமபுரி அமைப்பினர் சிறப்பாக செய்து வருவதை பாராட்டி தருமபுரி ஆட்சியர் திருமதி.சாந்தி அவர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கினார். 


இந்த‌ நிகழ்ச்சியினை மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, தருமபுரி மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மருத்துவர் கன்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன், அருணாசலம், அலெக்ஸாண்டர், விமலேஷ் ஆகியோர் விருது சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad