தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.செட்டி அள்ளி கிராமத்தில் சிறுத்தைகள் இருப்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வன துறையினர் பி.செட்டி அள்ளி கிராமத்திற்க்கு சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு தாய் சிறுத்தையுடன் குட்டிகள் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனதுறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். சிறுத்தைகள் பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும், இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக