தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து முதுகம்பட்டி விவசாய கிணற்றில் விழுந்த நாயை போராடி மீட்ட பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து முதுகம்பட்டி விவசாய கிணற்றில் விழுந்த நாயை போராடி மீட்ட பொதுமக்கள்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து முதுகம்பட்டி கிராமத்தில் கனகராஜ் என்பவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் ஆனது ஐந்து நாட்களாக காணவில்லை என்று அக்கம் பக்கம் மற்ற பக்கத்து ஊர்களில் தேடி வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாய ஆன மணிகண்டன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நாய் ஒன்று விழுந்து கிடப்பதாக கனகராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விவசாயி கணத்திற்கு வந்த கனகராஜ் தில் விழுந்திருக்கும் நாயை கண்டதும் கண்ணீர் விட்டு அழுது அது என்னுடைய நாய் தான் என்றும் அதனை உடனடியாக மீட்க அக்கம்பக்கத்தில் உள்ள ஊர் மக்களை அழைத்து வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பத்திரமாக நாயை மீட்டார் பின்னர் அந்த நாயை தன் பிள்ளை போல் இடுப்பில் வைத்துக் கொண்டு சென்றது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad