மகேந்திரமங்கலம் அடுத்த தாசம்பைல் கிராமத்தில் மாந்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த மெக்கானிக் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

மகேந்திரமங்கலம் அடுத்த தாசம்பைல் கிராமத்தில் மாந்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த மெக்கானிக் கைது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த தாசன்பைல் கிராமத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து போலீசார் தாசன்பைல் கிராமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தாசன்பைல் கிராமத்தை சேர்ந்த டூவீலர்  மெக்கானிக் பெரியசாமி (வயது.45) என்பவர் மாந்தோப்பில் மறைவாக உள்ள பகுதியில் விவசாய பயிருக்கு நடுவே 10 கஞ்சா செடி வளர்த்து வந்ததது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து 7500 ரூபாய் மதிப்புள்ள  கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார்,  பெரியசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad