திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சபியுல்லா வயது 30.துணி வியாபாரி. இவரது மனைவி சல்மா வயது 22. இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சபியுல்லாவும் சல்மாவும் பாப்பாரப்பட்டி கேடி முதலி தெருவில் உள்ள தனது மனைவியின் தாயார் வீட்டில் தங்கி இருந்தனர். சபியுல்லா பாப்பாரப்பட்டியில் நடைபாதை துணிவியாபாரம் செய்து வருகிறார்.
சல்மா தனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி மதியம் சல்மா தனது தாயார் வீட்டில் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டார்.
அப்பொழுது மாடிக்குச் சென்ற உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சல்மா பரிதாபமாக இறந்தார்.
பாப்பாரப்பட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக