கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 நவம்பர், 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது


டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமில் 80 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார்கள் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர்  வே.சம்பத்குமார் பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யாதனபால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌவுரிசங்கர், மண்டல இணை இயக்குனர் லதா, ஆகியோர் வழங்கினார்கள்.


இதில் திட்ட இயக்குனர் பத்ஹி முகமது நசிர், உதவி திட்ட இயக்குனர் செங்குட்டுவேல் வட்டார இயக்க மேலாளர் அறிவழகன், ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad