தர்மபுரி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்று வருகிறது.
ஓகேனக்கல் ஊரட்சி நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் நடைப்பெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது பென்னாகரம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக