மீண்டும் கடந்த 10மாதங்களுக்கு முன்பு பாலக்கோடு பிடிஓ அலுவலகத்திற்க்கு பணி மாறுதலாகி வந்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு போதையில் அலுவலகத்திற்க்கு வருவதாகவும், சில நேரங்களில் அலுவலகத்திலேயே அமர்ந்து மது அருந்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் இவரது மதுபழக்கத்தை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளின் ஒப்பந்ததாரர்கள் பி.டி.ஓ. சங்கரிடம் காசோலை பெறுவதற்கு மதுவை வாங்கி கொடுத்து காரியம் சாதித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்ந நிலையில் ஒப்பந்ததாரர் ஒருவர் பி.டி.ஓ சங்கருக்கு மது வாங்கி கொடுத்து கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ சங்கர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைராகி வரும் சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக