ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
மாதிரி நீர் பிரிப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது அதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆட்சிக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆயிரம் கன அடியாகவும் நேற்று நிலவரப்படி 7,500 கன அடியாக குறைந்தது இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கடந்த இரு தினங்களாக பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்றும் 7,500 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக