பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி, போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 நவம்பர், 2023

பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி, போலீசார் விசாரணை.


பாப்பிரெட்டிப்பட்டி அருகே 30 ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்றதாக வந்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சார்ந்த பெண் கண்ணகி வயது 52 கூலி வேலை செய்து வருகின்றார், இவருக்கு ஒரு மகன் உள்ளார் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவனைப் பிரிந்து தனியாக இருந்தார்.


இந்த நிலையில் அதே பகுதியை சார்ந்த ஏற்கனவே திருமணம் ஆன மனோகரன் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர், இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில மாதங்களாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்த உணவை கண்ணகி சாப்பிடுவதற்காக தட்டில் போட்டுள்ளார், அப்போது சாப்பாட்டில் இருந்து விஷ வாடை வந்ததால் சந்தேகம் அடைந்த கண்ணகி சாப்பாட்டுடன் காவல் நிலையத்தில் தன்னை தன் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனோகரன் கொலை செய்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதாவிடம் புகார் தெரிவித்தார்.


இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், உணவில் விஷம் கலந்தது தொடர்பாக சோதனைக்காக உணவு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது ,உணவில் பெண்ணை விஷம் வைத்துக் கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad