வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்தாக வழக்கு; நீீதி மன்றத்தில் ஆஜராகினார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்தாக வழக்கு; நீீதி மன்றத்தில் ஆஜராகினார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்.


அதிமுக முன்னாள் அமைச்சர்களுள் முக்கிய அமைச்சராக ஒருவராக இருந்து வந்த கே.பி. அன்பழகன் வருமானத்தை விட அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருந்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.


பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததை தொடர்ந்து  முறையாக சம்மன் அனுப்பபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட பதினொரு பேரும் கடந்த 6.11.23 ம்தேதி நடைபெற்ற வழக்கின் முதல் விசாரணைக்காக  அனைவரும்  ஆஜராகியிருந்தனர்.


இதனை தொடர்ந்து இன்று (22.11.23 ) நடைபெற்ற விசாரணைக்காக நீதிமன்றத்தில் அதிமுக  முன்னாள் அமைச்சர் கே பி  அன்பழகன் மற்றும் குடும்பத்தினர்  & உறவினர்கள் என பதினொரு பேரும் ஆஜராகியிருந்தனர், வழக்கின் அடுத்த விசாரணை  08.12.23 ம் தேதி நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad