தர்மபுரி மாவட்டம் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் சார்பாக மாதேஸ்வரன் மலை சுவாமி கோயிலில் மரக்கன்றுகள் நடும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

தர்மபுரி மாவட்டம் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் சார்பாக மாதேஸ்வரன் மலை சுவாமி கோயிலில் மரக்கன்றுகள் நடும் விழா.


தர்மபுரி மாவட்டம்  அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் சார்பாக பென்னாகரத்தில் அருகே உள்ள ஊத்துக்குளி மாதேஸ்வரன் மலை சுவாமி கோயிலில்  மரக்கன்றுகள்  நடும் விழா.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 13) அனைத்து  இந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் முனைவர். இரா. வினோத் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இருந்தது.அதனை தொடர்ந்து அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் நிறுவனர் சென்னையன், மாநில தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு இந்து திருகோயில் கூட்டமைப்பின் தருமபுரி மாவட்ட ஒருகினைப்பாளர் பவுனேசன் மற்றும் இத்திருகோயிலின் நிர்வாக உறுப்பினர்கள் லோகநாதன், சின்னசாமி, தங்கதுரை அகிய அனைவரும் உடன் இருந்து மரகன்றுகளை நாட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad