தருமபுரி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் சுகாதார நடைபயிற்சி தளத்தினை இன்று தருமபுரி மாவட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் இல்லம் வழியாக சிப்காட் சாலை, தடங்கம் வரையிலான 8 கி.மீ தொலைவிலான சுகாதார நடைபயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடைபயிற்சியை தொடங்கிய சிறிது நேரத்தில் மழையும் தொடங்கியது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய அலுவலர்கள் மட்டுமே இறுதிவரை நடைபயிற்சில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், டிஆர்ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கல்லூரி மாணவ மாணவிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக