நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்.


அதிமுக முன்னாள் அமைச்சர். கே.பி. அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அதற்கான பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர், இதனை தொடர்ந்து நீதி மன்ற நடைமுறைகள் தொடங்கியது, முறையாக சம்மன் அனுப்பபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட பதினொரு பேரும் இன்று நீதிமன்றத்தில் முதல் விசாரணைக்காக ஆஜராகியிருந்தனர்.


கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி 19 ம்தேதி கே பி அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய, 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர், அப்போது பணமாக 2 கோடியே 77 லட்ச ரூபாய் அளவிற்கு பணத்தினை பறிமுதல் செய்திருந்தனர், வருமானத்திற்கு அதிகமாக 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து அதற்கான ஆவணங்களையும் கைப்பபற்றியிருந்தனர். இந்த வருடம் ( 22.5.2023) அன்று தருமபுரி நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கையினை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மோளையனூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமானத்திற்கு அதிகமாக கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றினை கொடுத்திருக்கிறார்.


புகாரின் மீது லஞ்ச ஒழி்ப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க காலம் கடத்தவே, இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தினை நாடி உத்தரவு பெற்றதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கையில் இறங்கியுது, அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.


நீதி மன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியிருந்தனர் கே பி அன்பழகன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட பதினொறு பேரும் அடுத்த விசாரணை வருகிற 22.11.23  ம்தேதி நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad