மணியகாரன் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளிலில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புது பட்டாணியர் தெருவை சேர்ந்த 17 வயது வாலிபர், இவர் இன்று மாலை புதியதாக போடப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் FZமோட்டார் வாகனத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், வீலிங் செய்து வாகனத்தை இயக்கி வந்தார்,
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக