தருமபுரி நகராட்சி பச்சையம்மன் மயானம் மற்றும் தருமபுரி ரோட்டரி எரிவாயு தகனம் மேடையில் பணி செய்யும் ஊழியர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வழங்கி தித்திக்கும் தீபாவளி திருநாளை கொண்டாடினர் மை தருமபுரி அமைப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்ச்செல்வன், அருணாசலம், அலெக்சாண்டர் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் மயானத்தில் பணி செய்வோருக்கு புத்தாடைகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக