ஏரியூர் நியூட்டன் ஆப்பிள் பள்ளி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி பென்னாகரத்தில் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 நவம்பர், 2023

ஏரியூர் நியூட்டன் ஆப்பிள் பள்ளி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி பென்னாகரத்தில் நடைப்பெற்றது.


உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தாளாளர் பாபு தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பென்னாகரம் அரசு மருத்துவமனை பகுதியில் தொடங்கிய பேரணி தற்காலிக பேருந்து நிலையம், முள்ளுவாடி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், போடூர் நான்கு சாலை சந்திப்பு, நாகமரை பிரிவு சாலை பகுதி வரை சென்றது.

புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், புற்றுநோ யின் பாதிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பென்னாகரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் முருகன், மாதப்பன், பள்ளி முதல்வர் குபேந்திரன், பள்ளி தலைவர் ஜெக தீசன், செயலாளர் அருண்குமார், போக்குவரத்து காவலர்கள் கார்த்தி, பிரபாகரன், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad