தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சி, வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தில் 15ஆவது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இப்பணியை பார்வையிட்டு அனைத்து வீடுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கும் வகையில் பணியினை செயல்படுத்தவும், குடிநீர் குழாய் பதித்த தெரு பாதையை மேடு, பள்ளங்கள் இன்றி சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுதாசினிசெல்வம், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக், ஒன்றிய பொறுப்பாளர் ரங்கநாதன், ஒன்றிய பசுமைத் தாயக தலைவர் கண்ணதாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக