பாப்பாரப்பட்டி அருகே கட்டிடம் மேஸ்திரி மண்ணெண்ணெய் ஊற்றி தீட்டு தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

பாப்பாரப்பட்டி அருகே கட்டிடம் மேஸ்திரி மண்ணெண்ணெய் ஊற்றி தீட்டு தற்கொலை.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடு‌த்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள செக்கோடி கிராமத்தைச் சேரைந்த காளியப்பன் மகன் ஆறுமுகம்(50) கட்டிட மேஸ்திரி ஆவார் இவருக்கு பழனியம்மாள், லட்சுமி என  இரண்டு மனைவிகள்  உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியிடம் பிரிந்து இரண்டாவது மனைவி ஓசூரை சேர்ந்த லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு  ஓசூரில் கூலி வேலை செய்து வந்ததாகவும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆறுமுகம் என்பவர் பெங்களூரில் வாகன விபத்து ஏற்பட்டதாகும் விபத்தில் கண் பார்வை சரிவர தெரியாத நிலையில் இருந்து வந்ததாகவும் அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் அவருடைய சொந்த ஊரான செக்கோடிக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் வந்ததாகவும் மனவேதனையில் இருந்து வந்த ஆறுமுகம் நேற்று மாலை அவர்களுடைய வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தானே ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 


இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad