தர்மபுரி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்று வருகிறது.
பாலக்கோடு ஒன்றியம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் நடைப்பெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக