அரூரில் விடுதலை சிறுத்தைள் கட்சியின் மாவட்ட நிர்வாக கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

அரூரில் விடுதலை சிறுத்தைள் கட்சியின் மாவட்ட நிர்வாக கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைள் கட்சியின் மாவட்ட நிர்வாக கூட்டம், மாவட்ட செயலாளர் C.K.சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தாழை லட்சுமணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.இதில் மாவட்ட துணைச்செயலாள் செல்லை சக்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா,ஒன்றிய செயலாளர்கள், எம்.எஸ்.மூவேந்தன், திரு லோகு, பழனி, பாலைய்யா கலையரசன், தொகுதி துணைச்செயலாளர்கள், கோவிந்தராசு, தங்கதுரை, கேசவன், ஒன்றிய துணைச்செயலாளர் தீரன் தீர்த்தகிரி, தமிழ்செல்வன், செந்தில்வளவன், அரூர் பாஷா, குமார்வளவன், அரூர் ராம்,போன்ற முன்னனி பொருட்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

தீர்மானம்.01.

நவம்பர் 01- முதல் இணையதளத்தில் துவங்கப்பட்டுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக மாவட்டம் முழுவதும், கிளை பொருப்பாளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் துவங்க வேண்டும்.


தீர்மானம்: 02.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒவ்வொரு ஒன்றியங்களில், ஒன்றிய கூட்டங்களையும், நகர கூட்டங்களையும், முகாம் கூட்டங்களையும் நடத்த வேண்டும்.


தீர்மானம்:03.

வருகின்ற திசம்பர் - 23ல் திருச்சியில் நடைபெறும்" வெல்லும் சனநாயகம்" மாநாட்டிற்க்கு தருமபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள், பேனர்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றை செய்திடவேண்டும்.


தீர்மானம்:04.

வாக்காளர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை நவம்பர் 4, 5,18,19, ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய கிளை பொருப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் பயன்படுத்தி களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.


தீர்மானம் :05.

அரூர் பேருந்துநிலைத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும்.


தீர்மானம்:06.

நெல்லையில் பட்டியிலின இளைஞர்கள் மீது சாதிவெறியர்கள் கொடுரமான முறையில் தாக்கப்பட்டு உள்ளன. இதனை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad