ஒகேனக்கல் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தினை போலீஸார் மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னறு வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலம் இருப்பதாக ஒகேனக்கல் வனத்துறை மூலம் ஒகேனக்கல் காவல்துறையிவருக்கு தகவல் தெரிகிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சின்னாற்றின் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தினை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக