தீபாவளியை முன்னிட்டு பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 நவம்பர், 2023

தீபாவளியை முன்னிட்டு பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்.


தீபாவளியை முன்னிட்டு பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர், தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பி, குறிஞ்சிப்பட்டி வார சந்தை, வாரம் தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.

இந்த கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, ஏற்காடு மலையில் உள்ள மலை ஆடுகள் ,கிராமப் பகுதி ஆடுகள், பொம்மிடி. குறிஞ்சிப்பட்டி, முத்தம்பட்டி . ராமமூர்த்தி நகர், பி.பள்ளிப்பட்டி, பையர் நத்தம், மெனசி, கேத்துரெட்டிப்பட்டி, பில் பருத்தி என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்களது கால்நடைகளான ஆடு, மாடு, கோழி போன்றவைகளை விற்பதற்கு, வாங்குவதற்கும் இந்த சந்தைக்கு மக்கள் வருகின்றனர்.


இந்த வாரம் தீபாவளி சந்தை என்பதால் மலைப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள், பொம்மிடி வார சந்தைக்கு அதிக அளவில் வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது, தீபாவளி இறைச்சிக்காகவும், வளர்ப்புக்காகவும், வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.


சராசரி குட்டி ஆடுகள் 4 ஆயிரம் முதல் வளர்ந்த நல்ல நிலையில் உள்ள ஆடுகள் 25 ஆயிரம் வரை விற்பனையாகினர் இந்த வார சந்தையில் ஒரு கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இந்த ஆடுகளை மாவட்டத்தின் பிறப்பகுதிகளும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை என அண்டை மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் குவிந்ததால் இந்த வார சந்தை மக்கள் கூட்டத்தாலும், கால்நடைகளாலும் நிரம்பி காணப்பட்டது. வியாபாரிகளும் பொதுமக்களும் தாங்கள் வாங்கிய ஆடுகளை இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகனங்கள் மூலமாக  ஏற்றி சென்றனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad