மான் இறைச்சி சமைத்ததாக மூன்று பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

மான் இறைச்சி சமைத்ததாக மூன்று பேர் கைது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் நாய் கடித்த புள்ளி மானின் இறைச்சியை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த மூன்று பேரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து இணக்க கட்டணமாக ரூ.1.25 லட்சம் வசூலித்தனர்.

பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட மசக்கல் காப்புக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர் செந்தில்குமார், வனவர்கள் முனுசாமி, புகழேந்திரன், சக்திவேல் வன காப்பாளர் ஆறுமுகம், தங்கவேல், ராம ஜெயம், ராஜேஸ்வரி, ரகுராம் ஆகியோர்கள் அடங்கிய வனக்குழுவினர் மசக்கல் காப்புக்காடு பகுதியில் ஈடுபட்டனர். 


அப்பொழுது முதுகம்பட்டி அருகே சின்னூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (45) முருகேசன் (48)சின்னராஜ் L75)ஆகிய மூவரும் வனப்பகுதியில் நாய்கள் கடித்த புள்ளி மானின் கரியை வீட்டில் வைத்து சமைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்த நிலையில், அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இணக்க கட்டணமாக ரூ.1.25 லட்சம் வசூலித்தனர். வனப் பகுதிகளில் அத்திமீறி நுழையும் நபர்கள் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad