மாரண்டஅள்ளி நீலஞ்சனுர் கிராமத்தில் கனவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மண வேதனையில் தற்கொலை - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 நவம்பர், 2023

மாரண்டஅள்ளி நீலஞ்சனுர் கிராமத்தில் கனவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மண வேதனையில் தற்கொலை


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த நீலாஞ்சனுர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் இவரது மனைவி சத்தியா (வயது.40) இவர் கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கடந்த 3 ஆண்டுகளாக கனவரை பிரிந்து வாழ்கிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சத்யா நேற்று வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad