இரயிலில் அடிபட்டு இறந்த இரண்டு ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

இரயிலில் அடிபட்டு இறந்த இரண்டு ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி அருகே இருப்புப்பாதையில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார், இவரை பற்றி விசாரித்ததில் இவர்‌ யார் என்று தெரியவில்லை. இதேப்போல் புட்டிரெட்டிபட்டி இருப்புப்பாதை அருகேயும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார், இவரை பற்றி விசாரித்ததில் இவரும் யார் என்று தெரியவில்லை. இரண்டு பிரேதங்களை கைப்பற்றிய தருமபுரி இருப்புப்பாதை காவலர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். 

தருமபுரி இருப்புப்பாதை தலைமை காவலர் தேவராஜ், மை தருமபுரி அமரர் சேவை தன்னார்வலர்கள் மூலமாக இறுதி சடங்கு செய்ய மாய் தருமபுரி அமைப்பின் அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன், சந்திரசேகர், ஜாபர் ஆகியோர் புனித உடல்களை இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 68 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad