குமாரசாமிபேட்டை வன்னியர் மகாமாரியம்மன் கோவிலில் கேதார கவுரியம்மன் விரதம் சிறப்பு mவழிபாடு பெண்கள் சாமி தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 நவம்பர், 2023

குமாரசாமிபேட்டை வன்னியர் மகாமாரியம்மன் கோவிலில் கேதார கவுரியம்மன் விரதம் சிறப்பு mவழிபாடு பெண்கள் சாமி தரிசனம்.


தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெற்ற கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்தில் குடும்ப நன்மை மற்றும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று பெண்கள் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினமான  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தர்மபுரி  குமாரசாமிபேட்டை வன்னியர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. 


இதில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு மற்றும் பூக்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad