பாலக்கோட்டில் புனரமைக்கப்பட பேருந்து நிலையத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 83லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும் விதமாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க கொடி அசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
உடன் மாவட்ட ஆட்சியர் சாந்தி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி செயல் அலுவலர் டார்த்தி அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக