தருமபுரி - கிருஷ்ணகிரி சாலை, புரோக்கர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.பி பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் பதினொன்றாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ், மை தருமபுரி அமைப்பின் மூலம் ஐநூறு நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்த நிகழ்வை மை தருமபுரி அமைப்பின் சார்பாக தமிழ்செல்வன், முஹம்மத் ஜாபர், சந்திரசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் கடந்த மூன்றாண்டுகளாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக