அப்போது ஜிகே மணி பேசியதாவது காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கட்சியின் தலைவர் பலமுறை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் அது மட்டுமின்றி நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் கால்நடை குடிநீர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த அனைவரும் அவருடன் கைகோர்த்து போராடுவோம் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வரும் பதினெட்டாம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மாவட்ட தலைவர் செல்வகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதா கிருஷ்ணன் உள்பட கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக