தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரிமங்கலம் அடுத்த பத்தலஅள்ளி சுடுகாட்டில் சூதாடி கொண்டிருந்த 3 பேரும் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர் அதில் 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் பத்தல அள்ளியை சேர்ந்த சின்ன பையன் (வயது42), ஊமையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாதப்பன்(வயது. 49), என்பது தெரிய வந்தது, இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 750 ரூபாய் பணம், மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடி தலைமறைவான போலபகுத்தன அள்ளியை சேர்ந்த முத்துசாமி (வயது. 35) என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக