மை தருமபுரி சமூக சேவை அமைப்பு கடந்த பதினொன்று ஆண்டுகளாக தருமபுரி நகரில் மனிதநேயமிக்க சிறந்த சமூக சேவை செய்து வருகின்றனர். அவசர ரத்ததானம், உணவு சேவை, ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்தல், கல்வி சேவை, மாற்றுத்திறனாளிக்கு உதவுதல், பேரிடர் கால உதவி ஆகிய சேவைகளை சிறந்த முறையில் மனிதாபிமானத்துடன் சேவை அர்ப்பணித்துடன் செய்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருதை மை தருமபுரி அமைப்பிற்கு மதுரை அறம் அறக்கட்டளை அமைப்பினர் சென்னை காமராஜர் அரங்கத்தில் வழங்கினர். இந்த விருதினை திரைப்பட இயக்குனர் திரு.பாக்கியராஜ், செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் மை தருமபுரி அமைப்பிற்கு விருதை கொடுத்து கௌரவித்தனர்.
இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா, சமூக சேவகர் தமிழ்செல்வன், சமூக சேவகர் மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக