பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அனுசரிப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் கோபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி,  மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, நகர இணை செயலாளர் லட்சுமிகொளந்தை, முன்னாள் நகர  செயலாளர் சங்கர், முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், முன்னாள் கவுன்சிலர் ராஜா,அவைத்தலைவர் முத்துஜா, வீரமணி, அர்மன்நவப், பாஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு புஷ்பராஜ், சோமேஷ், கவுன்சிலர் குருமணி,கிளை கழக செயலாளர்கள் , மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள்,  நிர்வாகிகள்.பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad