கணபதி பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில் சுவாமிக்கு அதிகாலை முதலே பல்வேறு திரவியங்களான பால், பன்னீர், திராட்சை, சந்தனம்,இளநீர்,நெய் போன்ற சிறப்பு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு கன்னி பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி ராமானந்தா பூரி கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு தீபாரதனை காட்டினார்.
இதையடுத்து மேலதாளங்கள் முழங்க பட்டாளம்மன் கோவில் தெருவிலிருந்து பேருந்து நிலையம் ,காவல் நிலையம் ஸ்தூபி மைதானம் தர்மபுரி சாலை மற்றும் திரௌபதி அம்மன் கோயிலை அடைந்து திருவீதி உலாவானது மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஐயப்ப குரு சுவாமிகள் செய்திருந்தனர். திருவீதி உலாவையொட்டி பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக