கழிவு செய்யப்பட்ட அரசு அலுவலக வாகனங்கள் வரும் 5ஆம் தேதி பொது ஏலம் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 டிசம்பர், 2023

கழிவு செய்யப்பட்ட அரசு அலுவலக வாகனங்கள் வரும் 5ஆம் தேதி பொது ஏலம் அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்  இருந்து வந்த முக்கியப்பிரமுகர், வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்களின் கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது. 

வ.எண்

வாகன எண்

பயன்பாட்டு அலுவலர்

விற்பனை செய்ய தொழில் நுட்ப வல்லுநர் குழு நிர்ணயம் செய்த தொகை 

1.

TN29G0434

வட்டாட்சியர், பாப்பிரெட்டிப்பட்டி

ரூ.70,000/-

2.

TN29G0433

வட்டாட்சியர், பாலக்கோடு

ரூ.95,000/-

3.

TN29G0280

மாவட்ட ஆட்சியரக வரவேற்பு (Reception Vehicle)

ரூ.41,000/-

4.

TN29G0555

முக்கிய பிரமுகர் 

ரூ.24,000/-

5.

TN29G6000

முக்கிய பிரமுகர்

ரூ.35,000/-

 மேற்படி கழிவு செய்யப்பட்ட 05 வாகனங்களை 05.01.2024 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad