தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள தர்மராஜா கோயிலில் 6-ம் ஆண்டு அமாவாசை சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
கார்த்திகை மாதம் அமாவாசையன்று ஒவ்வொரு ஆண்டும் தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இன்று அமாவாசையையொட்டி காலை முதலே தர்மராஜா விக்ரகத்திற்க்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிப்பட்டு சிறப்பு ஆராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தர்மராஜா சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி பச்சியப்பன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக