தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சிக்க மாரண்டஅள்ளி புதூர் ஏரிக்கரை அருகே உள்ள 25 கிலோவாட் டிரான்ஸ்பார்மரை நேற்றிரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயில் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மாரண்டஅள்ளி மின் வாரியத்தித்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து மின் வாரிய உதவி பொறியாளர் திவாகர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக