கூட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர்கள் துரை, சக்கரை ஆலை துரை சரவணன், முருகன், குமார், ஒன்றிய தலைவர்கள் முருகேசன், கோவிந்தசாமி, மாதையன், மகாதேவன், நகர தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ராஜவேல் வரவேற்று பேசினார்.
இதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பிணர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன். மாநில துனைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினார்.
வரும் 18ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் திட்டமான, காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி, பாமக சார்பில் மக்கள் போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளையை சார்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும், திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, உழவர் பேரியிக்க மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் மாரியப்பன், வாசு நாயுடு, சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நகர இளைஞர் அணி செயலாளர் லோகநாதன் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக