தருமபுரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கும் தங்கம் வழங்கும் விழா தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார், இதனை தொடர்ந்து தருமபுரி பேருந்துநிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு, நீட்டிக்கப்பட்ட வழிதடங்கள், புதிய வழிதடங்களுக்கு சென்று வரும் வகையில் எட்டு அரசுப்பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி உள்ளிட்ட பொது மேலாளர் துணை மேலாளர் கிளை மேலாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக