பாலக்கோடு கடைவீதியில் உள்ள ஸ்ரீ ஞானபிள்ளையார் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

பாலக்கோடு கடைவீதியில் உள்ள ஸ்ரீ ஞானபிள்ளையார் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞானபிள்ளையார் கோயிலில் கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முதல் நாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம், இன்று மார்கழி மாதம் 12ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு  அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad