வெள்ள நிவாரண உதவி செய்த மை தருமபுரி அமைப்பை பாராட்டிய பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 டிசம்பர், 2023

வெள்ள நிவாரண உதவி செய்த மை தருமபுரி அமைப்பை பாராட்டிய பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தில் மனிதநேயமிக்க சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து செய்து வரும் மை தருமபுரி அமைப்பிற்கு மனிதநேயர் விருது 2023 வழங்கி கௌரவித்த பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பசுமை ஆசிரியர் சங்கர் அவர்கள். ஆதரவற்ற புனித உடல்களை இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தல், தினந்தோறும் ஏழை மக்களுக்கு உணவு, சென்னை மிக்ஜாம் புயல் நிவாரண உதவி மற்றும் தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவி ஆகிய சேவைகளை பாராட்டி கௌரவித்தனர். 

இந்த விருதினை மருதம் நெல்லி குழும தலைவர் முனைவர் கோவிந்த அய்யா அவர்கள் வழங்கினார், மை தருமபுரி அமைப்பின் சார்பாக தன்னார்வலர் ஹரிணி ஸ்ரீ தமிழ்செல்வன் அவர்கள் விருதை பெற்றுக் கொண்டார். என்றென்றும் மகத்தான மனிதநேயமிக்க சேவையில்‌ மை தருமபுரி சமூக சேவை அமைப்பு. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad